Published : 20 Jul 2021 03:13 AM
Last Updated : 20 Jul 2021 03:13 AM

ஏழுமலையானுக்கு ரூ.1 கோடியில் தங்க வாள்: ஹைதராபாத் தொழிலதிபர் எம்.எஸ். பிரசாத் காணிக்கை

திருப்பதி ஏழுமலையானுக்குதொழிலதிபர் எம்.எஸ்.பிரசாத்நேற்று தங்க வாளை காணிக் கையாக வழங்கினார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எம்.எஸ். பிரசாத் நேற்று காலையில் விஐபி பிரேக்தரிசன நேரத்தில் தனது மனைவியுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அப்போது அவர், மூலவருக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட தங்க வாளை, தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் காணிக்கையாக வழங்கினார். 6.5 கிலோ எடை கொண்ட இந்த வாள், கோயமுத்தூரில் மிகவும் கலை நயத்துடன் தயாரிக்கப்பட்டதாகவும் இதன் மதிப்பு ரூ. 1 கோடியே 8 லட்சம் என்றும் பிரசாத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஏழுமலையானுக்கு சூரிய கட்கம் எனும் தங்கவாள் உள்ளது. இதன் அளவில்தற்போது மற்றொரு வாள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x