Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

மகாபாரத காலத்திலேயே மத்தியஸ்த முயற்சி: தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான மத்தியஸ்த உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவும் பல ஆசிய நாடுகளும் பிரச்சினைகளை இணக்கமாக தீர்த்துக் கொள்ளும் நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளன. பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு கருவியாக மத்தியஸ்தம் ஆரம்ப காலத்தில் இருந்தே உள்ளது. இந்த ஆரம்ப கால முயற்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாக இந்தியாவின் மிகப்பெரிய காவியமான மகாபாரதம் திகழ்கிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் இடையிலான பிரச்சினையில் பகவான் கிருஷ்ணர் மத்தியஸ்தம் செய்ய முயன்றார்.

இந்தியாவில் ஆங்கிலேயர் வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பே இந்தியாவில் மத்தியஸ்தம் நடைமுறையில் இருந்துள்ளது. சர்ச்சைகள் பெரும்பாலும் கிராமத் தலைவர்கள் அல்லது பெரியவர்களால் தீர்க்கப்பட்டுள்ளன. மகாபாரதத்தில் மத்தியஸ்த முயற்சியில் ஏற்பட்ட தோல்வி, பேரழிவுக்கு வழிவகுத்தது நினைவுகூரத்தக்கது. நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதத்தால் மத்தியஸ்த முயற்சிக்கான தேவை எழுந்துள்ளது. அதேநேரத்தில் விமானிகள் போல ஒவ்வொரு ஆண்டும் மத்தியஸ்தர்களும் பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x