Last Updated : 02 Feb, 2016 10:05 AM

 

Published : 02 Feb 2016 10:05 AM
Last Updated : 02 Feb 2016 10:05 AM

உ.பி.யில் 7 நோயாளிகள் பார்வை இழப்பு

நோய்த் தொற்று கொண்ட ஊசி மருந்தை பயன்படுத்தியதால் உ.பி.யில் 7 நோயாளிகள் பார்வை இழந்தனர்.

வாரணாசி, சர் சுந்தர்லால் மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில், ஓ.பி.எஸ். மயூரா என்ற கண் மருத்துவரிடம் கடந்த வியாழக் கிழமை நோயாளிகள் சிகிச்சைக்கு வந்தனர். இவர்களில் 7 பேர் சேர்ந்து ரூ.23,500-க்கு ஓர் ஊசி மருந்து வாங்கி வருமாறு மருத்துவர் கூறியுள்ளார்.

இந்த ஊசி மருந்து செலுத்தப்பட்ட 7 பேரும் மறுநாள் தங்களின் ஒரு கண்ணில் பார்வை பறிபோனதாக புகார் கூறியுள்ளனர்.

இவர்களில் 5 பேர், வாரணாசி யில் உள்ள லங்கா காவல் நிலையத்தில் கண் மருத்துவர் ஓ.பி.எஸ். மயூராவுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x