Last Updated : 11 Jul, 2021 10:43 AM

 

Published : 11 Jul 2021 10:43 AM
Last Updated : 11 Jul 2021 10:43 AM

இந்தியாவில் தொடர்ந்து குறைந்துவரும் கரோனா தொற்று: தினசரி பாதிப்பு 41 ஆயிரமாகச் சரிந்தது


இந்தியாவில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 895 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்தியசுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியி்ட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“ கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 41 ஆயிரத்து 506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 54 ஆயிரத்து 118 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 8 லட்சத்து 37 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த பாதிப்பில், 1.47 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் இருந்து குணமடைந்து இதுவரை 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.20ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 8ஆயிரத்து 40ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 43 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 43 கோடியே 8 லட்சத்து 85 ஆயிரத்து 470 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 37.60 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x