Last Updated : 22 Feb, 2016 09:36 AM

 

Published : 22 Feb 2016 09:36 AM
Last Updated : 22 Feb 2016 09:36 AM

காஷ்மீரில் 2-வது நாளாக தொடர்ந்து என்கவுன்ட்டர்: 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 6 பேர் பலி, ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் புறநகர் பகுதியான பாம்பூரில் நேற்று 2-வது நாளாக தீவிரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் நீடித்தது. இதில் இதுவரை 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாம்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் உள்ளது. அங்கு சென்ற சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

தாக்குதல் நடத்திய தீவிரவாதி கள் அருகில் உள்ள தொழில் மேம் பாட்டு மையத்துக்குள் பதுங்கியுள் ளனர். அங்கு பணியாற்றிய 100 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட் டுள்ளனர். 2வது நாளாக நேற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக என் கவுன்ட்டர் நீடித்தது. ராணுவம், சி.ஆர்.பி.எப். மற்றும் மாநில போலீ ஸார் ஒருங்கிணைந்து என்கவுன்ட் டரை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய சண்டையில் ராணுவ கேப்டன் பவன் குமார், கேப்டன் துஷார் மகாஜன், ராணுவ வீரர் ஓம் பிரகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் இரண்டு நாள் சண்டையில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 வீரர்களும் பொதுமக்களில் 2 பேரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாம்பூர் தொழில் மேம்பாட்டு மைய கட்டிடத்துக்குள் 3 முதல் 5 தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. அவர் களை நெருங்கிவிட்டதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x