Last Updated : 21 Feb, 2016 10:29 AM

 

Published : 21 Feb 2016 10:29 AM
Last Updated : 21 Feb 2016 10:29 AM

ஐபிஎஸ் போல் நடித்து விமானப் படை ரகசியம் அறிய முயற்சி

ராஜஸ்தானில் உள்ள காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை ஐபிஎஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு, விமானப் படை தளம் குறித்த தகவல்களை கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் பாரிஸ் தேஷ்முக் கூறும்போது, “நேற்று முன்தினம் எங்கள் அலுவலகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர் தன்னை ஜம்மு-காஷ்மீர் கேடர் ஐபிஎஸ் அதிகாரி என தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.

பர்மெரில் உள்ள விமானப் படை தளம் குறித்த சில ரகசிய தகவல்களை அவர் கோரியுள்ளார். ஆனால், எவ்வித தகவல்களும் பகிர்ந்துகொள்ளப் படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x