Published : 05 Jul 2021 05:27 PM
Last Updated : 05 Jul 2021 05:27 PM

மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகள் வசம் 2.01 கோடி கோவிட் தடுப்பூசிகள்: மத்திய அரசு

புதுடெல்லி

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தனியார் மருத்துவமனைகளின் வசம் 2.01 கோடி கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 36.97 கோடிக்கும் அதிகமான (36,97,70,980) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 34,95,74,408 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 2.01 கோடி (2,01,96,572) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x