Published : 23 Feb 2016 03:58 PM
Last Updated : 23 Feb 2016 03:58 PM
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை ஏமாற்றமளிப்பதாக காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், "தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றி இந்த அரசு பேசிக்கொண்டே இருக்கிறது தவிர செயலில் ஏதும் இல்லை" என்றும் அவர் விமர்சித்தார்.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் மரபுப்படி குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது.
குடியரசுத் தலைவர் உரைக்குப் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் கூறும்போது, "குடியரசுத் தலைவர் உரையில் புதிதாக ஏதும் இல்லை. வெற்று கோஷங்கள் மட்டுமே இருந்தன. மக்கள் நலனுக்கான புதிய அறிவிப்புகள் ஏதும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
விலைவாசி உயர்வு, அண்டை நாடுடனான சர்ச்சை என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக ஸ்வச் பாரத் பற்றி குடியரசுத் தலைவர் பேசியிருக்கிறார். இந்த கோஷத்தை ஓராண்டுக்கு மேலாக கேட்டு வருகிறோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. எங்கு பார்த்தாலும் அசுத்தம் நிறைந்திருக்கிறது" என்றார்.
பாஜக பதிலடி:
காங்கிரஸ் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சியில் சான்றிதழ் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் சரியான பாதையிலேயே செல்வதாக மக்கள் எங்களுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT