Published : 28 Jun 2021 04:01 PM
Last Updated : 28 Jun 2021 04:01 PM

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

புதுடெல்லி

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி பி ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தளத்தில் இருந்து இன்று காலை 10:55 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ இந்த சோதனையை மேற்கொண்டது. அக்னி பி ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.

அக்னி ரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x