Published : 26 Jun 2021 03:11 AM
Last Updated : 26 Jun 2021 03:11 AM

அதிக நிதியுதவி: ஜாம்சேட்ஜி டாடா முதலிடம்

நியூயார்க்

கடந்த நூற்றாண்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிக அளவில் நிதியுதவி வழங்கியவர்களின் பட்டியலை சீனாவை சேர்ந்த ஹூரன் என்ற ஆய்வு நிறுவனம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

மொத்தம் 50 பேர் கொண்ட இப்பட்டியலில் டாடா நிறு வனத்தை தொடங்கியவரும், மறைந்த தொழிலதிபருமான ஜாம்சேட்ஜி டாடா முதலிடத்தை பிடித்துள்ளார். தனது வாழ்நாளில் அவர் ஏழை, எளியவர்களுக்காக 102 பில்லியன் டாலரை (ரூ.7 லட்சம் கோடி) வழங்கி இருக்கிறார். இந்த தொகையானது இலங்கை, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் ஜிடிபியை (மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்) விட அதிகமாகும்.

அடுத்த இடத்தில், மைக் ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x