நாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது

நாடுமுழுவதும் கோவிட் தடுப்பூசி: எண்ணிக்கை 28 கோடியை கடந்தது
Updated on
1 min read

நாட்டில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது.

மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. தொடர்ந்து நாடுமுழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 28 கோடியை கடந்தது.

இன்று காலை 7 மணி வரை கிடைத்த தகவல்படி, 38,24,408 அமர்வுகள் மூலம் மொத்தம் 28,00,36,898 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,39,996 தடுப்பூசிகள் போடப்பட்டன.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. கடந்த 88 நாட்களில் இது மிக குறைவான அளவு. நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைகிறது.

Caption
Caption

தொடர்ந்து 14 நாட்களாக, தினசரி கோவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் பாதிப்பு குறைந்துள்ளது.

நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று, 7,02,887-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 26,356 குறைந்தது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம், தற்போது மொத்த பாதிப்பில் 2.35 சதவீதமாக உள்ளது.

கடந்த 39 நாட்களாக கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கோவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கோவிட் பாதிப்பை விட சுமார் 25,000 (24,934) பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.

இதுவரை 2,88,44,199 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த சதவீதம் 96.36.

கடந்த 24 மணி நேரத்தில் 13,88,699 கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை மொத்தம் 39.24 கோடி கோவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in