Published : 18 Jun 2021 03:13 AM
Last Updated : 18 Jun 2021 03:13 AM

2 டோஸ்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சோனியா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி 2 டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கடந்த மே 16-ல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ராகுல் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என்று வந்திருந்தது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும் என்பது ஐசிஎம்ஆரின் விதி என்பதால் ராகுல் தடுப்பூசி போட காத்திருக்கிறார்.

தடுப்பூசி கொள்கையில் உள்ள குழப்பங்கள் பற்றி எதிர்க்கட்சிகள் குறை கூறினால், அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என்று பாஜக கேள்வி எழுப்புகிறது. இதைவிடுத்து ராஜ தர்மத்தை பின்பற்றி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x