Published : 31 Mar 2014 12:02 PM
Last Updated : 31 Mar 2014 12:02 PM
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத அரசு அமைய பாடுபடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
இது குறித்து அவர் டெல்லி யில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 1964-ல் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முதல் முறையாக இணைந்து போட்டியிடுகின்றன. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நாங்கள் 18 தொகுதிகளில் போட்டி யிடுகிறோம்.
தேர்தலுக்குப் பிறகு தேர்தல் முடிவுகளுக்கு ஏற்பவே எந்தவொரு முடிவும் எடுக்க முடியும். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பாஜக அல்லாத மக்களுக்கு பயன்தரக்கூடிய மாற்று திட்டங்களை செயல்படுத்தும் அரசை ஏற்படுத்த இடதுசாரிகள் பாடுபடுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT