Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
பஞ்சாபில் முதல்வர் அமரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்குஅடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலையொட்டி அகாலி தளமும் பகுஜன்சமாஜும் கூட்டணி அமைத்துள்ளன.
இந்த பின்னணியில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆளும்காங்கிரஸ் அரசு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டி சுக்பிர் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம், பகுஜன் சமாஜ் சார்பில் மொகாலியின் சிஸ்வானில் உள்ள முதல்வர் அமரிந்தர் சிங் வீட்டுக்கு பேரணியாக சென்றனர். அதிக விலைக்கு கரோனா மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அரசு மருத்துவமனைகளுக்கான கரோனா தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இந்த ஊழல்களுக்கு காரணமான சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சுக்பிர் சிங் பாதல் உட்பட கட்சித் தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT