Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுலும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி எழுப்பி உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரஹலாத் ஜோஷி கூறியதாவது: இந்தியாவில் ஜனவரி மாதம் கரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. அப்போது தடுப்பூசியின் செயல் திறன் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர். தற்போது அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
அதேநேரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? அவர்கள் தடுப்பூசி போடதது ஏன்? எனக்கு தெரிந்தவரை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இன்னும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இந்திய தடுப்பூசிகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தடுப்பூசி குறித்து மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.
இவ்வாறு பிரஹலாத் ஜோஷி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT