Published : 11 Jun 2021 03:12 AM
Last Updated : 11 Jun 2021 03:12 AM

தடுப்பூசிகள் வீணாக்குவதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம்

புதுடெல்லி

கரோனா தொற்றை தடுக்க நாடுமுழுவதும் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

கடந்த மே மாத நிலவரப்படி கரோனா தடுப்பூசி களை வீணடித்த மாநிலங்கள், முழுமையாக பயன்படுத்திய மாநிலங்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 33.95 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகளை அதிகம் வீணடித்த மாநிலங்களில் ஜார்க் கண்ட் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்தபடியாக, சத்தீஸ்கர் 15.79 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 7.35 சதவீதமும் மருந்தை வீணடித் துள்ளன. பஞ்சாப் 7.8 டெல்லி 3.95 சதவீதமும் வீணடித்துள்ளது.

அதேவேளையில், கேரள மாநிலம் 1.10 லட்சம் தடுப்பூசி டோஸ்களையும் மேற்கு வங்கம் 1.61 லட்சம் டோஸ்களையும் வீணடிக்காமல் முழுவதுமாக பயன்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மே மாதத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 790.60 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 658.6 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 610.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 212.7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில்உள்ளதாகவும் அதில்் கூறப்பட்டுள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x