கரோனா தினசரி தொற்று;  94,052: ஒரு நாள் பலி எண்ணிக்கை 6148 ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மூன்றாவது நாளாக இன்றும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 6148 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94,052 ஆக உள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,91,83,121

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 94,052

இதுவரை குணமடைந்தோர்: 2,76,55,493

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,51,367

கரோனா உயிரிழப்புகள்: 3,59,676

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 6148

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 11,67,952

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 23,90,58,360

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 37,21,98,253பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,04,690 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in