Published : 08 Jun 2021 08:54 AM
Last Updated : 08 Jun 2021 08:54 AM

டெல்லியில் காற்று மாசு இன்றும் நாளையும் மோசமாக இருக்கும்: வானிலை முன்னறிவிப்பு மையம்

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்றும் நாளையும் காற்றின் தரம் மோசமானதாக இருக்கும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானியல் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் மேலும் பாதிக்கப்படும். பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசு எழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதியில் இருந்தும் தூசு வந்தடையலாம் என்பதால், பிஎம்10 எனும் அளவில் காற்றின் தரம் இருக்கும்.

கோப்புப் படம்

டெல்லி-தேசிய தலைநகர் பகுதிக்கான காற்றின் தரம் நேற்று (ஜூன் 7-ம் தேதி) நடுத்தரமான அளவில் இருந்தது. ஜூன் 8 மற்றும் ஜூன் 9 அன்று மிதமானதில் இருந்து மோசமான பிரிவுக்கு காற்றின் தரம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலத்த காற்றின் காரணமாக உள்ளூரில் தூசிப்படலம் எழும்புவதோடு, அருகில் இருக்கும் பகுதிகளிலும் இருந்தும் தூசுப்படலம் வந்தடையலாம். இதனால் மக்கள் முன்னெச்செரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x