Published : 08 Jun 2021 03:12 AM
Last Updated : 08 Jun 2021 03:12 AM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போட புதிய திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன்படி எந்த வாக்குச் சாவடியில் மக்கள் வாக்களித்தார்களோ அந்த வாக்குச் சாவடிக்கு சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதுதொடர்பாக அடுத்த 2 நாட்கள் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தேர்தலை போன்று அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் கரோனா தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுகிறவர்களுக்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் தெளிவான விளக்கம் அளிப்பார்கள். அடுத்த 4 வாரத்துக்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பிங்க் மையம்: உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 2 கோடி கரோனா தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் பெண்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்க பிங்க் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது பெண்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT