Published : 07 Jun 2021 03:17 PM
Last Updated : 07 Jun 2021 03:17 PM

கோவிட் தடுப்பூசி: செலுத்தியது 23.11 கோடி; மாநிலங்கள் கையிருப்பில் 1.49 கோடி  

புதுடெல்லி

மாநிலங்களின் கையிருப்பில் 1.49 கோடி கோவிட் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடுமுழுவதும் மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி உத்தி, மே 1 முதல் தொடங்கபபட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இதுவரை, 24 கோடிக்கும் அதிகமான (24,60,80,900) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 23,11,69,251 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 1.49 கோடி (1,49,11,649) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x