

மாநிலங்களின் கையிருப்பில் 1.49 கோடி கோவிட் தடுப்பூசிகள் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடுமுழுவதும் மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி உத்தி, மே 1 முதல் தொடங்கபபட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்துகள் ஆய்வகம் அனுமதி அளித்த மொத்த தடுப்பூசிகளில் 50 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்குகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இதுவரை, 24 கோடிக்கும் அதிகமான (24,60,80,900) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 23,11,69,251 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.
சுமார் 1.49 கோடி (1,49,11,649) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.