Published : 07 Jun 2021 03:12 AM
Last Updated : 07 Jun 2021 03:12 AM
உ.பி. மாநிலம் அலிகாரில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 2 வாரங்களில் 100-க்கும் அதிக மானோர் இறந்துள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 61 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பாஜகவைச் சேர்ந்த ரிஷி சர்மா என்பவர் தலைமறைவானார். அவரைபற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உ.பி.யின் புலந்த்சாகர் மாவட்ட எல்லையில் ரிஷி சர்மாவை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரது மனைவி, மகன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT