Published : 05 Jun 2021 09:20 AM
Last Updated : 05 Jun 2021 09:20 AM

தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம்: ரயில்வே நடவடிக்கை

புதுடெல்லி

தென் மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது. தமிழகத்துக்கு 2,711 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே இதுவரை, பல மாநிலங்களுக்கு 1463-க்கும் மேற்பட்ட டேங்கர்களில், 24,840 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை, விநியோகித்துள்ளது.

இதுவரை 359 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தங்கள் பயணத்தை முடித்துள்ளன. தற்போது 30 டேங்கர்களில் 587 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 6 ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன.

தென்மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு 10,000 மெட்ரிக் டன்களை கடந்தது.

தென் மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தலா 2,500 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன்களை பெற்றுள்ளன.

இதுவரை மகாராஷ்டிராவுக்கு 614, உத்தரப் பிரதேசத்துக்கு 3,797, மத்தியப் பிரதேசத்துக்கு 656, தில்லிக்கு 5,826, ஹரியானாவுக்கு 2,135, ராஜஸ்தானுக்கு 98, கர்நாடகாவுக்கு 2,870, உத்தரகாண்ட்டுக்கு 320, தமிழகத்துக்கு 2,711, ஆந்திரப்பிரதேசத்துக்கு 2,528, பஞ்சாப்புக்கு 225, கேரளாவுக்கு 513, தெலங்கானாவுக்கு 2,184, ஜார்கண்ட்டுக்கு 38, அசாமுக்கு 320 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன்கள் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x