Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, ‘புராஜக்ட் 75 இந்தியா’ என்ற பெயரில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது. நீண்ட காலமாக இத்திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ரூ.50 ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, மும்பையில் அரசுக்கு சொந்தமான மஸாகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் தனியார் நிறுவனமான எல் அண்ட் டி-க்கு விரைவில் ஒப்பந்தம் அளிக்கப்பட உள்ளது.
இந்த 2 நிறுவனங்களும் வெளி நாடுகளின் தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக் கும். மஸாகான் - எல் அண்ட்டி இணைந்து ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், தென் கொரியா ஆகிய 5 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டின் நிறுவனத்துடன் தொழில் நுட்ப ஒப்பந்தம் மேற்கொண்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT