Published : 27 Dec 2015 11:13 AM
Last Updated : 27 Dec 2015 11:13 AM

பாஜக எம்எல்ஏ.வுக்கு ஐ.எஸ். தீவிரவாதி கொலை மிரட்டல்

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் கலவரத்தை துாண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோமுக்கு ஐ.எஸ் தீவிரவாதியிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் முஸாபர்நகரில் நடந்த கலவரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநிலத்தின் சர்தானா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரிவினைவாத அமைப்புகளிடம் இருந்து தொடர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால், கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதியிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக சங்கீத் சோம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:

தனிப்பட்ட எண்ணில் இருந்து எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. எதிர்புறத்தில் பேசிய நபர் சிலியில் இருந்து பேசுவதாகவும் என்னை கொல்வதற்கு அனுப்பி வைத்துள்ள ஆட்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்ட தாகவும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், வீணாக பிதற்றுவதை நிறுத்துமாறு கடிந்து கொண்டேன். அப்போதும் நிறுத்தாமல் பேசிய அந்த நபர் தான் ஒரு ஐ.எஸ் தீவிரவாதி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். இந்தியில் தான் அந்த நபர் பேசினான். இந்த கொலை மிரட்டல் தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x