Published : 04 Dec 2015 09:34 AM
Last Updated : 04 Dec 2015 09:34 AM
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.எஸ்.தாக்கூர் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச்.எல்.தத்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். அவரையடுத்து மூத்த நீதிபதியாக உள்ள தீரத் சிங் தாக்கூர்(63) புதிய தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப் பட்டார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நேற்று நடந்த விழாவில் உச்ச நீதி மன்றத்தின் 43வது தலைமை நீதிபதி யாக அவர் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு
எளிமையாக நடந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, சதானந்த கவுடா, ஹர்ஷ் வர்தன், ஸ்மிருதி இரானி மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நீதிபதியின் மகன்
புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுக் கொண்டுள்ள டி.எஸ்.தாக்கூரின் தந்தை தேவி தாஸ் தாக்கூர் ஜம்மு காஷ்மீர் மாநில துணை முதல் வராக இருந்தவர்; சட்ட நிபுணர். ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர். தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்19 72-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார். அவரது தந்தையிடம் ஜூனியராக பணியாற்றினார். 90-ம் ஆண்டு மூத்த வழக்கறிஞரானார். 94-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். 95-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டு டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு 2004-ல் மாற்றப் பட்டார். அங்கு தற்காலிக தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். 2008-ல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2009-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT