Published : 01 Jun 2021 08:11 AM
Last Updated : 01 Jun 2021 08:11 AM

ராஜஸ்தான் சுரு பகுதியில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பம்; இனியும் அனல் காற்று வீசுமா?

நாட்டில் எங்கும் அனல் காற்று வீச வாய்ப்பில்லை என தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவு இருக்கும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே இந்த வழக்கத்தை விட முன்கூட்டியே கேரளாவில் 31-ம் தேதியே பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என்று தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்து இருந்தது.

முந்தைய கணிப்புக்கு பதிலாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்காத நிலையில் நாட்டின் சில பகுதிகளில் இரண்டு தினங்களாக அனல் காற்று வீசியது. மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் நேற்றுமுன்தினம் அனல் காற்று வீசியது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உட்பட நாட்டின் பல பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகியது.

அதிகபட்சமாக மேற்கு ராஜஸ்தானின் சுரு பகுதியில் 45.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. நாட்டின் எந்த பகுதியிலும் அனல் காற்று வீச வாய்ப்பில்லை எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x