Published : 29 May 2021 12:55 PM
Last Updated : 29 May 2021 12:55 PM

தமிழகத்திற்கு 1554 மெட்ரிக் டன்: எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் விநியோகம்

புதுடெல்லி

19408 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாடு முழுவதும் விநியோகித்துள்ளன. தமிழகத்திற்கு 1554 மெட்ரிக் டன் வழங்கப்பட்டது.

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1162 டேங்கர்களில் 19,408 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.

இதுவரை 289 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 50 டேங்கர்களில் 865 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 11 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

தென் இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பெற்றுள்ளன.

தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜனை பெற்றுள்ளன.

இதுவரை தமிழகத்திற்கு 1554 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3731 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5185 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1967 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 1773 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 11268 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 380 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 1432 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 160 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x