Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

கருப்பு பூஞ்சையை குணமாக்க மாநிலங்களுக்கு 19,420 குப்பி ஆம்போடெரிசின்

புதுடெல்லி

கருப்பு பூஞ்சையை குணப்படுத்த உதவும்ஆம்போடெரிசின்-பி மருந்து 23,680 குப்பிகளை பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த 21-ம்தேதி அனுப்பி வைத்தது. தற்போது மேலும் 19,420 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்தை மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு பயன்படுத்தியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மூக்கு, கண்கள், சில நேரங்களில் மூளையைக்கூட இது பாதிக்கிறது. இந்த நோயைக் குணப்படுத்த ஆம்போடெரிசின்-பி மருந்து பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு பூஞ்சை நோய் நாடு முழுவதும்பரவி வருவதால் இந்த மருந்துக்கான தேவைஅதிகரித்துள்ளது. இதையடுத்து, 23,680 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்தை பல்வேறுமாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த 21-ம் தேதி அனுப்பியது.

இந்நிலையில், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் சதானந்த கவுடா நேற்று கூறியதாவது:

மாநில அரசுகளுக்கு கூடுதலாக 19,420 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத்துக்கு 4,640, மகாராஷ்டிரா வுக்கு 4,060 குப்பிகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இதுதவிர, ஆந்திரா (1,840), மத்திய பிரதேசம் (1,470), ராஜஸ்தான் (1,430), உத்தரபிரதேசம் (1,260) மற்றும் கர்நாடகா (1,030) உள்ளிட்ட மாநிலங்களுக்கு கணிசமான அளவில் இந்த மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x