Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM
புதுடெல்லி: மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் வரும் 26-ம் தேதியுடன் 6 மாதத்தை நிறைவு செய்யவுள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கருப்பு தின போராட்டத்துக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT