Published : 24 May 2021 09:42 AM
Last Updated : 24 May 2021 09:42 AM

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு  2,22,315 ஆக குறைந்தது

புதுடெல்லி


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,22,315 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,02,544 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,67,52,447

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,22,315

இதுவரை குணமடைந்தோர்: 2,37,28,011

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,02,544

கரோனா உயிரிழப்புகள்: 3,03,720

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,454

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 27,20,716

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,60,51,962

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 33,05,36,064 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 19,28,127 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x