Last Updated : 24 May, 2021 08:11 AM

 

Published : 24 May 2021 08:11 AM
Last Updated : 24 May 2021 08:11 AM

அமைச்சரவையில் மாமனார்-மருமகன் ; தொடர்ந்து 2-வது முறையாக எல்டிஎப்அரசு: கேரளாவின் 15-வது சட்டப்பேரவை இன்று கூடுகிறது


கேரளாவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் 15-வது சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு நடக்கிறது.

மாமனாரும் அமைச்சரவையில் மருமகன், புதிய எதிர்க்கட்சித் தலைவர், அதிகமான பெண் அமைச்சர்கள் போன்ற பல்வேறு வித்தியாசமான அம்சங்களுடன் புதிய சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடக்கும் சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 14ம் தேதிவரை நடக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியவுடன் இடைக்கால சபாநாயகரும் குன்னமங்கலம் எம்எல்ஏ பிடிஏ ரஹிம், எம்எல்ஏக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்பின் நாளை நடக்கும் கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சபாநாயகராக திரிதலா எம்எல்ஏ எம்.பி.ராஜேஷ் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக காங்கிரஸ் இதுவரை யாரையும் நிறுத்தவில்லை. காங்கிரஸுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் சபாநாயகருக்கு எந்த வேட்பாளரையும் நிறுத்தாது எனத் தெரிகிறது.

வரும் 28-ம் தேதி ஆளுநர் முகமது ஆரிஃப்கான் பாரம்பரிய முறைப்படி புதிய அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டக் கூட்டத்தில் உரையாற்றுவார். அதைத் தொடர்ந்து 2021-22ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதிஅமைச்சர் கே.என். பாலகோபால் தாக்கல் செய்யஉள்ளார்.

கேரளாவில் இன்று கூட உள்ள 15-வது சட்டப்பேரவை பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக தொடர்ந்து 2-வது முறையாக ஒரே அரசும், முதல்வரும பதவி ஏற்கஉள்ளனர்.

  • எதிர்க்கட்சித் தரப்பி்ல் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வி.டி.சதீஷன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு விவகாரங்களில் சென்னிதலாவுக்கும், முதல்வர் பினராயிவிஜயனுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் சட்டப்பேரவையில் எழுந்துள்ளன.
  • முதல்முறையாக மாமனாரும் மருமகனும் ஒரே அமைச்சரவையில், சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ளனர். முதல்வர் பினராயி விஜயனும், அவரின் மருமகனும் பொதுப்பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸ் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
புதிய அமைச்சர்கள் வீணா ஜார்ஜ், முகமது ரியாஸ்
  • அமைச்சரவையில் உள்ள மதச்சார்பற்றஜனதா தளம் எம்எல்ஏவும் அமைச்சருமான கே.கிருஷ்ணன் குட்டி, என்சிபி கட்சியி்ன் ஏ.கே.சசீந்திரன் உள்ளிட்ட 18 பேர் புதிய அமைச்சர்கள்.
  • இந்தஅமைச்சரவையில் அதிகபட்சமாக வீணா ஜார்ஜ்(சுகாதாரத்துறை),ஆர் பிந்து(உயர்கல்வி சமூகநீதி), ஜே.சின்ஜுராணி(கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை) ஆகிய 3 பெண் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வடகரா தொகுதியில் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற கே.ேக.ரேமா சட்டப்பேரவைக்குள் வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x