Published : 29 Dec 2015 03:22 PM
Last Updated : 29 Dec 2015 03:22 PM

புணே இன்போசிஸ் வளாகத்தில் பெண் ஊழியர் பலாத்காரம்: போலீஸ் தீவிர விசாரணை

புணே இன்போசிஸ் வளாகத்தில் பெண் ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 27-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஹின்ஜேவாடி காவல் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழ்மை) புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸார் கூறும்போது, "இன்போசிஸ் வளாகத்தில் கடந்த 27-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள உணவகத்தில் காசாளாராக பணியாற்றி வருகிறார்.

ஹவுஸ்கீப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அப்பெண் கூறுகிறார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x