

புணே இன்போசிஸ் வளாகத்தில் பெண் ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 27-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஹின்ஜேவாடி காவல் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழ்மை) புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "இன்போசிஸ் வளாகத்தில் கடந்த 27-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள உணவகத்தில் காசாளாராக பணியாற்றி வருகிறார்.
ஹவுஸ்கீப்பிங் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களே இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அப்பெண் கூறுகிறார். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.