Published : 19 Dec 2015 04:48 PM
Last Updated : 19 Dec 2015 04:48 PM
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்ய அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் ஆட்சியின் போது தனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், பிறகு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே ரத்து செய்ததாகவும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:
நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது எனக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதை ரத்து செய்தது. பிறகு எங்கள் பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபோது இது அநீதி என்று எனக்கு மீண்டும் இதே பிரிவில் பாதுகாப்பு மீண்டும் வழங்கப்பட்டது.
ஒருவேளை தற்போது காங்கிரஸ் கட்சி நரசிம்மராவையே பாஜக நபராகப் பார்க்குமோ என்னவோ.
வழக்கை எதிர்த்து ஊர்வலம் செல்வது, கூட்டத்தைக் கூட்டுவது ஆகியவற்றுக்கு ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். இதனால் நம் நாட்டில் அனைவரும் சமம் அல்ல என்பதும், நாட்டில் ஜனநாயகம் நன்றாக நிறுவப்படவில்லை என்ற செய்தியுமே மக்களைச் சென்றடையும்.
இதனால்தான் காங்கிரஸ் கட்சியின் பெயர் கெடுகிறது என்பதை காங்கிரஸாருக்கு தெரிவிக்கிறேன். நீங்கள் இந்த வழக்கில் தோல்வியை எதிர்நோக்குகிறீர்கள் அதனால்தான் இத்தனை ஆர்பாட்டங்கள் செய்கிறீர்கள். வெற்றி பெறும் நம்பிக்கை இருந்தால் கோர்ட்டுக்கு சிரித்த முகத்துடன் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT