Last Updated : 23 May, 2021 10:19 AM

 

Published : 23 May 2021 10:19 AM
Last Updated : 23 May 2021 10:19 AM

4-வது வாரமாக லாக்டவுன்: டெல்லியிலிருந்து 8 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியேறினார்


டெல்லியில் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கை சமாளிக்க முடியாமல், இதுவரை 8 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் டெல்லியிலிருந்து வெளியேறியதாக போக்குவரத்து துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 19ம் தேதி ஊரடங்கை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவி்த்தார். அதன்பின் ஊரடங்கு படிப்படியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 4-வது வாரமாக லாக்டவுன் நீடித்து வருகிறது. அடுத்த வாரமும் லாக்டவுன் நீட்டிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 4 வார லாக்டவுன் காலத்தில் டெல்லியில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் டெல்லியிலிருந்து வெளியேறி சொந்த மாநிலம் திரும்பினர்.

ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 14ம் தேதிவரை இதுவரை டெல்லியிலிருந்து பேருந்துகள் மூலம் 8 லட்சத்துக்கு 7 ஆயிரத்து 32 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றனர்.

கோப்புப்படம்

இதில் ஊரடங்கின் முதல் வாரத்தில் மட்டும் 3லட்சத்து 79 ஆயிரத்து 604 தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றனர். 2-வது வாரத்தில் 2,12,448 தொழிலாளர்களும், 3-வதுவாரத்தில் 1,22,490 பேரும், 4-வது வாரத்தில் 92,490 பேரும் டெல்லியிலிருந்து வெளியேறினர். இந்த 4 வாரங்களில் மட்டும் மாநிலங்களுக்கு இடையே 21,879 முறை பேருந்து போக்குவரத்து நடந்துள்ளது .

இது குறித்து டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையில், “ அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தகுந்த நேரத்தில் ஒத்துழைப்பு அளித்ததால், லாக்டவுன் காலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாப்பாக சொந்த ஊரில் சேர்க்க முடிந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊரில் சேர்க்க 500 பேருந்து குழுக்களை டெல்லி போக்குவரத்து ஏற்பாடு செய்திருந்தது. எந்த தொழிலாளயிடம் இருந்தும் அதிகமான கட்டம் வசூலிக்கப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x