Published : 22 May 2021 03:35 PM
Last Updated : 22 May 2021 03:35 PM

மாநிலங்கள் வசம் 1.60 கோடி கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு

புதுடெல்லி

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வசம் 1.60 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இதுவரை, சுமார் 21 கோடி (21,33,74,720) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது.

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 2,67,110 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 19,73,61,311 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 1.60 கோடிக்கும் அதிகமான (1,60,13,409) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x