Published : 21 May 2021 03:11 AM
Last Updated : 21 May 2021 03:11 AM

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

புதுடெல்லி

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா நோய் தொற்றால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். குடும்பத்தில் சம்பாதிக்கும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும் கவலையளிக்கிறது. அந்தக் குழந்தைகளுக்கு வலிமையான ஆரோக்கியமான எதிர்காலத்தை அளிக்க நாடு கடமைப்பட்டிருக்கிறது. கரோனா தொற்றால் பெற்றோர் இருவரையுமோ அல்லது சம்பாதிக்கும் பெற்றோரில் ஒருவரையோ இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க வேண்டும். கரோனாவால் பெற்றோரை இழந்தகுழந்தைகளுக்கு நவோதயா பள்ளிகள் மூலம் இலவசக் கல்வி அளிக்க வேண்டும். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி கூறியுள்ளார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x