Published : 20 May 2021 11:07 AM
Last Updated : 20 May 2021 11:07 AM

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா கரோனா தொற்றால் பலி

மூத்த காங்கிரஸ் தலைவரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் ஜெகநாத் பகாடியா கரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.

ஜெகநாத் பகாடியா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1980-81 ஆண்டில் ராஜஸ்தான் முதல்வராக பதவி வகித்தார். ஹரியாணா மற்றும் பிஹார் மாநில ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முதுமை காரணமாக ஓய்வில் இருந்த அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் பகாடியா மறைவு வேதனை அளிக்கிறது. நீண்ட அரசியல், நிர்வாகத்திலும், சமூக பணிகளுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

ஜெகநாத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x