Published : 19 May 2021 10:13 AM
Last Updated : 19 May 2021 10:13 AM

ஒரே நாளில் 3,89,851 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்: தினசரி பாதிப்பு 2,67,334

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக2,67,334 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 3,89,851 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,54,96,330

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,67,334

இதுவரை குணமடைந்தோர்: 2,19,86,363

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,89,851

கரோனா உயிரிழப்புகள்: 2,83,248

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4529

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 32,26,719

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 18,58,09,302

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 32,03,01,177 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 20,08,296 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x