Published : 16 May 2021 03:31 PM
Last Updated : 16 May 2021 03:31 PM

மேலும் தீவிரமடைந்தது டவ்-தே புயல்; குஜராத்தில் 18-ம் தேதி காலை கரையை கடக்க வாய்ப்பு

டவ்-தே புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து, குஜராத்தில் 18ம் தேதி காலை கரையை கடக்கும் வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னிறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய வானிலை முன்னிறிவிப்பு மையம் தெரிவித்துள்ளதாவது:

கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயல் டவ்-தே, கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு நோக்கி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணியளவில் கிழக்கு மத்திய அரபிக் கடலில் பஞ்சிம் கோவுக்கு மேற்கு -தென்மேற்கு திசையில் 130 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, குஜராத் கடற்கரையை நாளை மாலை சென்றடையும். அதன்பின் குஜராத் பாவ்நகர் மாவட்டத்தின் போர்பந்தர் மற்றும் மகுவா இடையே மே 18ம் தேதி காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x