Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM
இமாச்சல பிரதேசம் கான்கிரா மாவட்டம், ரானிடால் பகுதியை சேர்ந்தவர் வீர் சிங். கடந்த 12-ம் தேதி இவரது தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. எந்த மருத்துவ மனையிலும் இடம் கிடைக்காத நிலையில் வீர் சிங் தாயாருடன் வீட்டுக்கு வந்தார். கடந்த 13-ம் தேதி அதிகாலை அவரது தாயார் உயிரிழந்தார். இதுகுறித்து உள்ளூர் தலைவருக்கும் உறவினர் களுக்கும் தகவல் அளித்தார்.
ஆனால் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக வீர் சிங் வீட்டுக்கு யாரும் வரவில்லை. தாயின் உடலை எடுத்து செல்ல தள்ளுவண்டி கொடுத்து உதவ கூட கிராமத் தலைவரும் உறவினர் களும் தயாராக இல்லை.
இறுதியில் 2 பாதுகாப்பு கவச உடைகளை வீர் சிங் வாங்கி வந்தார். ஓர் உடையை அவர் அணிந்து கொண்டார். மற்றொரு உடையை உயிரிழந்த தாய்க்கு அணிவித்தார். தனியொருவனாக தாயை தோளில் சுமந்து கொண்டு மயானத்துக்கு நடந்து சென்றார். அங்கு தாயின் உடலை எரியூட்டிவிட்டு கண்ணீர் மல்க வீட்டுக்கு திரும்பினார்.
இதுகுறித்து வீர் சிங் கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற பீதியால் யாரும் உதவிக்கு வராத நிலையில் நானும் எனது மனைவியும் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தோம். மனைவியை மயானத்துக்கு அழைத்து செல்ல முடியாது என்பதால் நான் மட்டும் எனது தாயை தோளில் சுமந்து சென்று எரியூட்டினேன். கரோனா வைரஸால் மனிதாபிமானம் முழு மையாக செத்துவிட்டது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT