Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சர்ச்சை

மேற்கு வங்க தேர்தலில் திரிணமூல் அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொண்டது.

தேர்தலுக்கு பிறகு பாஜக.வினரை குறி வைத்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. வன்முறையால் சுமார் 40,000 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆளுநர் ஜெகதீப் தன்கர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். கூச்பெஹார் பகுதி, தின்ஹட்டாவுக்கு ஆளுநர் சென்ற போது போலீஸாரும் திரிணமூல் காங்கிரஸாரும் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆளுநர் கூறும்போது, "மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. வீடுகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மக்களை போலீஸாரே மிரட்டுகின்றனர். என்னை துப்பாக்கியால் சுட்டாலும் மார்பில் குண்டை தாங்குவேன். ஒட்டுமொத்த மாநிலமும் பற்றி எரிகிறது. முதல்வர் மம்தாவின் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை" என்று தெரிவித்தார். முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்த நந்திகிராம் தொகுதி வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நந்திகிராம் பகுதிக்கு ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x