Published : 14 May 2021 09:50 AM
Last Updated : 14 May 2021 09:50 AM

இந்தியாவில் 3,43,144 பேருக்கு புதிதாக கரோனா தொற்று

புதுடெல்லி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,43,144 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,43,144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 37,04,893 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கரோனாவிலிருந்து 2,00,79,599 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிே நேரத்தில் கரோனாவிலிருந்து 3,44,776 பேர் குணமடைந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,62,317 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17,92,98,584 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 31,13,24,100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 18,75,515 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x