Published : 13 May 2021 12:03 PM
Last Updated : 13 May 2021 12:03 PM

கோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை

கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் தற்போது நடைமுறையில் உள்ள 4-8 வார இடைவெளியை 12-16 வாரமாக மாற்ற நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் உள்ளிட்ட மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பயன்பாட்டில் உள்ள கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.

கோவாக்சின் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் 4 வார காலத்திற்கு பிறகு செலுத்தப்படுகிறது. அதேசமயம கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்கும் இடைவெளி 4-6 வாரமாக முதலில் பின்பற்ற்பட்டது.

பிறகு இந்த இடைவெளியை 4-8 வாரமாக மாற்றி மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்தது. இந்தநிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸுக்கும் இரண்டாம் டோஸுக்குமான கால அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை பரிந்துரைக்கப்பட்டுள்ள 12-16 வாரங்களுக்குள் செலுத்துமாறு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 12-16 வாரங்களுக்குள் வழங்கப்பட்டால் அதன் பாதுகாப்பு அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான இடைவெளியை மாற்றி அமைக்குமாறு தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழுவும், கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவும் பரிந்துரைத்தபடி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும், கோவாக்சின் தடுப்பூசிக்கு அல்ல. தேசிய தொழில்நுணுக்க ஆலோசனைக் குழு, கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு ஆகியவற்றின் பரிந்துரையை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பரிசீலித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x