Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டிய 16 முஸ்லிம் ஊழியர்கள் பணி இடை நீக்கம்

பெங்களூருவில் கரோனா நோயாளிகளுக்கு உதவுவதற்காக மாநகராட்சி மண்டல வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா, கடந்த வாரம் இந்த உதவி மையங்களை ஆய்வு செய்தார். பின்னர், ‘‘கரோனா நோயாளிகளிடம் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு ஐசியூ படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த முறைகேட்டில் மாநகராட்சி அதிகாரிகள் சிலரும், தனியார் ஒப்பந்ததாரர்களும், தனியார் மருத்துவமனை ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்’’ என்று புகார் தெரிவித்தார். மேலும் 16 முஸ்லிம் ஊழியர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.

மதரீதியான இந்த கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ஜமீர் அகமது, ரிஸ்வான் அர்ஷத் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.இதையடுத்து தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், ஐசியூ படுக்கை ஒதுக்கீடு விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா புகார் கூறிய 16 முஸ்லிம் ஊழியர்களை நேற்று பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பணி இடை நீக்கம் செய்துள்ளது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x