Published : 06 May 2021 01:18 PM
Last Updated : 06 May 2021 01:18 PM

தமிழகத்திற்கு மேலும்  1,00,000 டோஸ்கள் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

தமிழகத்தின் வசம் 2,56,493 கரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும், 1,00,000 தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த மூன்று நாட்களில், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 28,90,360 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக அளிக்க உள்ளது.

இதுவரை, 17.15 கோடி (17,15,42,410) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. இன்று காலை எட்டு மணி வரையிலான நிலவரப்படி, 16,26,10,905 டோஸ் தடுப்பு மருந்து (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.

89,31,505 கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வசம் கையிருப்பில் உள்ளன.

தமிழக நிலவரம்: தமிழ்நாட்டுக்கு இதுவரை 71,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 8.83 சதவீதம் வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 68,47,457 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2,56,493 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்தின்வசம் கையிருப்பில் உள்ளன. 1,00,000 தடுப்பூசி டோஸ்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளன.

புதுச்சேரி நிலவரம் : புதுச்சேரி யூனியன்பிரதேசத்திற்கு இதுவரை 3,97,130 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் 1.61 சதவீதம் வீணானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, 2,10,379 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,86,751 தடுப்பூசி டோஸ்கள் புதுச்சேரிவசம் கையிருப்பில் உள்ளன.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x