Published : 05 May 2021 01:12 PM
Last Updated : 05 May 2021 01:12 PM

மேற்குவங்க முதல்வராக மீண்டும் மம்தா பானர்ஜி பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து

மேற்குவங்க முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 292 தொகுதிகளுக்கும் நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் வென்று திரிணமூல் காங்கிரஸ் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது.

இதையடுத்து, மேற்கு வங்க மாநில முதல்வராக 3-வது முறையாக மம்தா பானர்ஜி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். வெள்ளைப் புடவை, வெள்ளை சால்வை அணிந்து வந்திருந்த மம்தா பானர்ஜி, காலை 10.45 மணிக்கு வங்காள மொழியில் பதவி ஏற்றுக்கொண்டார்.

மேற்குவங்க முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் “மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தாவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x