Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

கரோனா வைரஸால் பத்திரிகையாளர் ரோஹித் சர்தானா உயிரிழப்பு

நாட்டின் பிரபல ஊடக நிறுவனங்களான ஆஜ் தக் மற்றும் ஜீ நியூஸ் ஆகியவற்றில் செய்தியாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்ட பணியாற்றியவர் ரோஹித் சர்தானா. இவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதியானதை அடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதுதொடர் ஜீ நியூஸ் நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் சுதிர் சவுத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது "இந்தக் கொடிய வைரஸ் என் வாழ்கையில் மிகவும் நெருக்கமாக இருந்தவரின் உயிரை பறிக்கும் என்று நான் நினைக்கவே இல்லை" என்று தெரிவித்துள்ளார். சர்தானாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியைப் பதிவிட்டு உள்ளார். மேலும் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் பலரும் ரோஹித் சர்தானா மறைவுக்காக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2018-ம் ஆண்டுக்கான கணேஷ் வித்யார்த்தி புரஸ்கார் விருது உள்பட பல்வேறு விருதுகளை ரோஹித் சர்தானா பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x