Published : 30 Apr 2021 10:39 AM
Last Updated : 30 Apr 2021 10:39 AM

முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கரோனாவுக்கு பலி

கோப்புப் படம்

புதுடெல்லி

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்.

முன்னாள் அட்டர்னி ஜெனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி. மூத்த வழக்கறிஞரான இவருக்கு வயது வயது 91. இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது பெற்ற பெருமைக்கு உரியவர். கடந்த 1930ம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் சட்ட கல்வி பயின்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

இதன்பின்னர் கடந்த 1971ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரானார். கடந்த 1989ம் ஆண்டு அவர் அட்டர்னி ஜெனரலானார். கடந்த 1998ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மீண்டும் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

வயதான நிலையில் அவர் வீட்டில் ஓய்வாக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x